TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குரூப் 2 தேர்வுக்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குரூப் 2, 2A தேர்வு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்துடன் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை அண்மையில் TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் உலக நாடுகள் – நீடிக்கும் பதற்றம்!
இதில் தெரிவித்தாவது, குரூப் 2 தேர்வு வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5529 காலியிடங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. அதனால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார் செய்து கொண்டு வருகின்றனர். அத்துடன் TNPSC நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது குரூப் 2 தேர்வு பற்றி விரிவாக பார்க்கலாம்.
விண்ணப்பிக்க வழிமுறைகள்
குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு வருகிற மார்ச் 23ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.
பதவிகள்
இதில் நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதையடுத்து நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசின் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் TNPSCயில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி
குரூப் 2 தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
குரூப் 2 பதவிக்கு பொது பிரிவினருக்கு 18 முதல் 32 வரை நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இதில் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இருவகைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு
இத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழி பாடத்தில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து பட்டப்படிப்புத் தரத்தில் 75 வினாக்களும் அத்துடன் கணிதப்பகுதியில் பத்தாம் வகுப்பு தரத்தில் 25 வினாக்களும் என மொத்தமாக 200 வினாக்கள் கேட்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!
இத்தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண் பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முதன்மை தேர்வு
முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதலாவதாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது. இதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யப்படும். மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இதில் 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும் குரூப் 2ஏ தேர்வுக்கு நேர்முக தேர்வு நடைபெறாது. இதில் அவர்கள் இரண்டாம் தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.