மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஃபிட்மென்ட் காரணி உயர்வு? விரைவில் அறிவிப்பு!

நீண்ட காலமாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வரும் அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையுடன் ஃபிட்மென்ட் காரணியும் கணிசமான அளவு உயர்வடைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபிட்மென்ட் காரணி

மத்திய அரசு ஊழியர்கள் வரும் மாதத்தில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் குறைந்தபட்ச அடிப்படை வருமானத்தை மாதந்தோறும் ரூ.18,000 முதல் ரூ.26,000 வரை உயர்த்துவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஏற்கனவே பல ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி விபரங்கள் வெளியீடு!

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள், மோடி அரசாங்கத்திற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் அரசு மற்றும் ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவது மட்டும் தான் மீதம் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு, இந்த மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதாவது வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு இந்த அறிவிப்புகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் இந்த மாபெரும் பரிசைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனஸ் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.26,000 ஆக உயரும். இது குறித்து நிதி நிபுணர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும்.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இதற்கு முன்னதாக கடந்த 2016ல் பொருத்துதல் காரணி அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.6,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டுமாக பொருத்துதல் காரணியில் திட்டமிடப்பட்ட அதிகரிப்பு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.26,000க்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் 34% ஆக அதிகரிக்கும் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!