தமிழகத்தில் 4 நாட்களுக்கு மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் மின் கம்பி தொடர்பாக பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்றும் மற்றும் 3 நாட்களுக்கும் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின்கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் இந்த விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் துணை மின்நிலையத்தில் மின்தடை ஏற்படும். இதனை முறையாக மின்வாரியம் அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை, காலக்கெடு பற்றிய விவரங்கள்!
இவ்வாறு அறிவிப்பதால் அங்குள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள தாமரைக்குளம் மின் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் இன்றும் மற்றும் பிப்ரவரி 25,26 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு உத்தரவு!
இதில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான ஜெ.ஆா்.ஆா். நகர், கம்பம் சாலை, பாரதி நகர், வடுகபட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் மற்றும் நாளை அத்துடன் பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 1ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் மின்பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.