EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை, காலக்கெடு பற்றிய விவரங்கள்!
ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை வருடம் முழுவதும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை சமர்ப்பித்த நாளிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் சான்றிதழ்:
அரசு நிறுவனங்களில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள், தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானை வாழ்க்கைச் சான்றாகச் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பலன்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கிடைக்கும். தற்போது ஆயுள் சான்றிதழுக்கான நடைமுறைகளை மாற்றி உள்ளனர். பல மாநிலங்களில் தற்போதும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழக ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் வட்டி விகிதம் குறைப்பு – அரசின் முக்கிய அறிவிப்பு!
வயதில் முதியவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்களின் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான தற்போதைய காலக்கெடுவை டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் இப்போது பிப்ரவரி 28, 2022 வரை வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளால் (PDAs) ஓய்வூதியம் இடையூறு இல்லாமல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இபிஎஸ்’95 ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம், இது சமர்ப்பித்த நாளிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அறிவித்துள்ளது. EPFO தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:
- ஓய்வூதியம் வழங்கும் வங்கி
- IPPB/இந்திய அஞ்சல் அலுவலகம்/அஞ்சல்காரர்
- உமாங் ஆப்
- அருகிலுள்ள EPFO அலுவலகம்
தேவையான ஆவணங்கள்:
- PPO எண்
- ஆதார் எண்
- வங்கி கணக்கு விவரங்கள்
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்