மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை வழங்கப்படுமா?
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்குவது குறித்து உறுதி அளிக்கவில்லை. இந்த நிலையில் அகவிலைப்படி குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகும் என்று ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
நிலுவைத் தொகை:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வந்துள்ளது.
மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் மொத்தம் 34% பெறுவார்கள். இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் போது நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வரவு வைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நிலுவைத் தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அகவிலைப்படி குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகும் என்று ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
TN TRB 9494 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திட்ட அட்டவணை வெளியீடு!
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறுபவர்களுக்கு ஊதியம் ரூபாய் 6,120 கூடுதலாக கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறுபவருக்கு ரூ.19,346 கூடுதல் தொகையாக கிடைக்கும். அகவிலைப்படியை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. மத்திய அரசு fitment factor உயர்த்தும் கோரிக்கையைத் தற்போது ஆய்வு செய்து வருகிறது. இதனால் சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.