விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. கோபியின் தந்தை ராமமூர்த்தியின் மரணம் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா கோபியின் குடும்பத்தை தன்னுடைய குடும்பமாக நினைக்க ஆனால் கோபி பாக்கியாவை விட்டு ராதிகா உடன் வாழ வேண்டும் என நினைக்கிறார். அவர் பாக்கியாவை விட்டு நிரந்தரமாக பிரிய வக்கீலை பார்க்க அவர் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்க சொல்கிறார். கோபியை பற்றிய முழு உண்மையும் தெரிந்த ஒரே ஆள் கோபியின் தந்தை ராமமூர்த்தி தான்.
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய ஷாரிக் & அபிநய் – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய் பேச முடியாமல் இருக்கிறார். அதனால் அவரால் கோபியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் பாக்கியாவின் அறியாமையை பயன்படுத்தி கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கும் பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா, பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிய வருமா என பல திருப்பங்கள் வர இருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – TRPயில் ஏற்பட்ட மாற்றம்!
இந்நிலையில் அடுத்த வாரம் யாரும் எதிர்பாராத விதத்தில் பெரிய அதிர்ச்சி ஏற்பட இருக்கிறது. அதாவது கோபியின் தந்தை ராமமூர்த்தி இறந்துவிட போகிறார். அதனால் குடும்பமே மீள முடியாத சோகத்தில் இருக்கிறது. இந்த நேரத்திலும் கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா என்பதே சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட். ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.