“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய ஷாரிக் & அபிநய் – ரசிகர்கள் ஷாக்!
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் முடிவடைந்துள்ள நிலையில் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேறிய போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வார எலிமினேஷன்:
விஜய் டிவியில் “பிக்பாஸ்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது. இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில், அதன் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் விளையாடிய போட்டியாளர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டது. 50 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – TRPயில் ஏற்பட்ட மாற்றம்!
மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். மூன்று வாரங்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் 2 பேர் வெளியேற இருக்கின்றனர். இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! பொதுமக்கள் அச்சம்!
அதன்படி மக்களின் குறைவான வாக்குகள் அடிப்படையில் ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறி இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொகுத்து வழங்குவது இது தான் இறுதி வாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர். மேலும் அடுத்த வாரம் எந்த பிரபலம் வர போகிறார்கள் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.