கதிர் & முல்லையை பார்த்து வயிற்றெரிச்சலில் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வரை கடை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கதிர் மற்றும் முல்லை இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து மீனா கலாய்ப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மீனாவின் புலம்பல்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தங்களது இத்தனை வருட கனவான புது கடையை, திறப்பது குறித்த காட்சிகள் தான் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடை திறப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்னர் கடைசி நேரத்தில் கடையை திறக்க முடியாத படி பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வழக்கம் போல் ஒன்றாக சேர்ந்து அந்த பிரச்சனையை சமாளித்தனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடைக்கு லட்சுமணன் பெயரா? தனத்தால் உருவாகும் அடுத்த குழப்பம்!
அனைத்து பிரச்சனைகளும் முடிந்து கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. இதனால் மும்முரமாக அனைவரும் புது கடை திறப்பு விழாவிற்கு தயாரானார்கள். அந்த கேப்பில் கதிர் முல்லைக்கு பூ வாங்கிக் கொண்டு வரும் போது, அதை அனைவர்க்கும் தான் என்று நினைத்து மற்றவர்களும் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அப்போது கதிரும், முல்லையும் சேர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ!
கதிர் முல்லைக்கு பூ வைத்து விடுகிறார். அப்போது பார்த்து வழக்கம் போல் சரியாக என்ட்ரி கொடுக்கிறார் மீனா. வழக்கம் போல் இந்த காட்சியை பார்த்து வயிறெரிச்சலில் புலம்புகிறார். உடனே கயல் பாப்பா அழும் சத்தம் கேட்டவுடன் நீங்க நடத்துங்க என்று கூறி விட்டு செல்கிறார். கடந்த சில வாரங்களாக முல்லை சோகத்தில் இருப்பது போலவும், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வருத்தத்தில் இருப்பது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருந்ததால், இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.