‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடைக்கு லட்சுமணன் பெயரா? தனத்தால் உருவாகும் அடுத்த குழப்பம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது புதிதாக கட்டப்பட்ட கடைக்கு லட்சுமண பாண்டியன் பெயரை வைத்துள்ளதாக தனம் கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் வெளியாக இருக்க, இதன் மூலம் குடும்பத்தில் புதிய குழப்பம் உருவாகலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடையை மீட்டெடுத்த அண்ணன், தம்பிகள் அனைவரும் கடை திறப்பு விழாவிற்காக ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் புதிய கடையை திறக்க போஸ்டர் ஒட்டுவது, புது துணி தைப்பது, வாகனத்தில் அறிவிப்பு செய்வது, கோலம் போடுவது என நிஜமான விசேஷ வீட்டில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இடம்பிடித்திருந்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ!
இந்த காட்சிகள் கடந்த சில எபிசோடுகளாக வெளியாகி ஜவ்வாக இழுத்து வர எப்போது தான் புதிய கடையை திறப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடிலும் கடை திறப்பு விழாவுக்காக அனைவரும் தயாராகி கொண்டிருக்கின்றனர். அப்போது குட்டி பாண்டியனுக்கு சட்டை போட்டுவிடும் தனம் அந்த குழந்தையிடம், உன் பெயரில் தான் புதிதாக கடை திறக்கப்போகிறோம். உன் பெயரில் உன் அப்பா, சித்தப்பா எல்லாரும் கடை திறக்க போகிறார்கள்.
கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
நீ வளர்ந்து வந்து என் பெயரில் தான் கடை இருக்கிறதா என்று கேட்ப என பேசிக்கொண்டிருக்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக எதற்கெடுத்தாலும் குடும்பத்திற்கு என்று சொல்லும் தனம், புதிய கடையை எப்படி குட்டி பாண்டியனின் பெயரில் துவங்குவதாக சொல்ல முடியும், இது மட்டும் மீனாவுக்கு தெரிந்தால் வீடு இரண்டாகி விடும், கயல் பாப்பா பெயரில் அடுத்த கடையை திறக்க வேண்டியது தான், இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கடையை திறக்க கிளம்புவீர்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.