மாநிலம் முழுவதும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு? அரசு விளக்கம்!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை சீராகி வருவதால், அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
மாநிலம் முழுவதும் கொரோனா பேரலைத்தொற்றின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதை கவனத்தில் கொண்ட ஒடிசா அரசு இன்று (பிப்.18) முதல் அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி இருக்கிறது. அந்த வகையில் இனி ஒடிசா மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்காது என்று மாநில சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக ஒடிசாவில் கொரோனா 3ம் அலை அதிகரிப்புக்கு மத்தியில் ஜனவரி மாதத்தில் இருந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
அந்த வகையில் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையுள்ள ஊரடங்கிற்கு மத்தியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்த நடவடிக்கை துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு பிப்.1 முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதித்தது. அதன் படி, 8 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள், ஐடிஐக்கள், பாலிடெக்னிக்குகள், தொழில்முறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட தொடங்கி உள்ளது.
இப்போது பள்ளிகளில் வகுப்பறை கற்பித்தல் முறை தொடங்கப்பட்டாலும், மாணவர்கள் ஆன்லைன் அல்லது ஹைப்ரிட் முறைகளிலும் கல்வி கற்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஒடிசா மாநிலத்தில் நேற்று (பிப்.17) ஒரு நாளில் 671 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தினசரி நேர்மறை விகிதம் 1.14% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.