‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை திறப்பு விழாவுக்கு தயாராகும் முல்லை & கதிர் – அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், அதில் கடையை திறப்பதற்காக ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் சேர்ந்து கோலம் போடும் காட்சிகள் இடம்பிடித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஒவ்வொரு நாளும் பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் 800க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. மக்களின் ரசனைக்கேற்ற விதத்தில் இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டு வருவதால் இது ஒருபோதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. என்றாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அவ்வப்போது சில ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் TRP ரேட்டிங்கில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழில் யார் தெரியுமா? ரசிகர்களை வியக்க வைக்கும் தகவல்கள்!
அந்த வகையில் இதுவரை மூர்த்தி – கண்ணன் பிரச்சனை, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை சிக்கல், மீனா – ஐஸ்வர்யா சண்டை என இந்த சீரியலில் காணப்பட்டு வந்த அனைத்து பிரச்சனைகளும் தற்போது ஓய்ந்திருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் கடை திறப்பு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். அதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பது, துணி தைப்பது என்று இந்த சீரியல் விசேஷ வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலித்து வருகிறது.
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கிக்கு ஏற்பட்ட மன வருத்தம் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
இதுவரை, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய கடை திறப்பு விழாவுக்காக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முல்லை பிளவுஸ் தைத்து கொடுக்கிறார். தொடர்ந்து கதிருக்கும் ஒரு சட்டை தைத்து கொடுத்து அவரை சர்பிரைஸ் செய்கிறார் முல்லை. இதனை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடைக்கு முன்பாக ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் சேர்ந்து கோலம் போடுவது போலவும், கதிர் கடைக்கு வேண்டிய அலங்காரங்களை செய்வது போலவும் அடுத்து வரவிருக்கும் எபிசோடிற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.