அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு!
இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஜனவரி 1, 2016 முதல் மாதத்திற்கு ரூ.3,500லிருந்து ரூ.9,000 ஆக உயரத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் உயர்வு:
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுமார் 1.73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பிப்ரவரி 1 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க இருப்பதாக இமாச்சலப் பிரதேச அரசு திங்கள்கிழமை முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனவரி 1, 2016 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் ஓய்வு பெற்ற சுமார் 43,000 ஊழியர்களும் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கொடையை பெறுவார்கள் என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அறிவித்தபடி 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 2016 ஜனவரி 1 முதல் மாதம் ரூ.3,500-லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் என்பிஎஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையின் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் கூடுதல் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி முன்னணி சீரியல்களில் நேர மாற்றம் – இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ்!
ஜூலை 1, 2021 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஓய்வூதியத் திருத்தம் காரணமாக ஆண்டுக்கு ரூ.1,785 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும், மாநில அரசு ஏற்கனவே இடைக்கால நிவாரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,450.44 கோடி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக 108 தேசிய ஆம்புலன்ஸ் சேவையின் கீழ் 50 கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.