பிப்ரவரி 20 வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டி வருகிறது. அதன்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை விதித்து வருகிறது. தற்போது பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது மற்ற மாநிலங்களை தொடர்ந்து திரிபுராவிலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20ம் தேதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகிய இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
ஆனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும் 100% பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய வைரஸ் பரவி வருவதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.