அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை - மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை - மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – மாநில முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக வளர்ச்சி உள்ளதால், அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சூப்பர் அறிவிப்பு:

நாடு முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. இருப்பினும் அரசு ஊழியர்கள் மட்டும் கொரோனா அச்சம் இல்லாமல் பொதுமக்களுக்காக பணி செய்தனர். இந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஜான்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடமை உணர்ச்சி காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

Post Office இல் தினமும் 150 முதலீடு ரூ.20 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இதற்காக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள், மாநில அரசுடன் இணைந்து பணியாற்றினால், மாநிலத்தின் வளர்ச்சி மிக சிறப்பானதாக இருக்கும். இந்த வகையில் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் என்ற செய்தி விரைவில் வர உள்ளதாக முதல்வர் கூறினார். இதனை தொடர்ந்து மாநில வளர்ச்சி, நகர்புறத்தில் மட்டும் இல்லாமல் கிராமப்புற மற்றும் குக்கிராமங்களிலும் பல மடங்கு வளர்ச்சி உள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

மேலும் அரசு ஊழியர்களின் சிறப்பான ஒத்துழைப்பால் மண்டல அமைப்பு மற்றும் பணியாளர்கள் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். அந்த வகையில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க, தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன். எனவே அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்து உள்ளார். இந்த தகவல் அரசு ஊழியர்களிடம் அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!