சரக்குகளை காப்பாற்ற கஷ்டப்படும் கதிர், உண்மையை சொன்ன ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனிற்கு உண்மை தெரிந்தும் அவர் சொல்லாமல் இருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா கதிரிடம் சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் உண்மையை ஐஸ்வர்யாவிடம் சொல்ல இப்பவே சென்று எல்லாரிடமும் சொல்வோம் என ஐஸ்வர்யா சொல்கிறார். ஆனால் கண்ணன் மறுபடியும் எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் என தெரிந்தால் நம்மை மீண்டும் வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் அதை நம்மளால் தாங்க முடியாது என சொல்கிறார். அதனால் ஐஸ்வர்யா எதுவும் பேசாமல் படுகிறார். மறுபக்கம் ஜீவாவும் மீனாவின் கடையை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க, எல்லாம் என் அப்பா பார்த்துக் கொள்வார் என மீனா சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
நாளைக்கு பிரச்சனை சரியாகாமல் இருந்தால் என்ன செய்வது என கேட்க அடுத்த நாள் சரியாகிவிடும் என் அப்பா தான் இந்த குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் வருகிறார் என மீனா சொல்கிறார். பின் இந்த பிரச்சனையில் உங்களை கவனிக்காமல் இருந்துவிட்டேன் என சொல்ல, இருவரும் சாப்பிட்டீர்களா என ஜீவா கேட்க மீனா நக்கலடித்து பேசுகிறார். பின் கதிர் முல்லை தூங்கி கொண்டிருக்க, பயங்கரமாக மழை பெய்கிறது. அப்போது லாரி ட்ரைவர் போன் செய்து சரக்கு எல்லாம் நனைவதாக சொல்கிறார்.
அப்பா வருகையை கொண்டாட நினைக்கும் லட்சுமி, அதை பார்த்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
உடனே கதிர் நான் வருவதாக சொல்லி கிளம்ப அப்போது ஐஸ்வர்யா வருகிறார். வெளியே மழை பெய்கிறது எங்கே போறீங்க என கேட்க கடை வேலையாக போவதாக கதிர் சொல்கிறார். உங்களிடம் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என ஐஸ்வர்யா சொல்ல, நான் அவரச வேலையாக செல்கிறேன் என கதிர் கிளம்புகிறார். அங்கே சரக்கு எல்லாம் நனைந்து கொண்டிருக்க, அதை எல்லாம் கதிர் பத்திரமான இடத்தில் வைக்கிறார். பின் மழை விடும் வரை அங்கையே இருந்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
அப்போது ஐஸ்வர்யா தூங்காமல் காத்துக் கொண்டிருக்க உனக்கும் கண்ணனிற்கும் எதாவது பிரச்சனையா என கதிர் கேட்கிறார். அதெல்லாம் இல்லை கடை பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் என ஐஸ்வர்யா சொல்ல, நீங்க அன்னைக்கு கண்ணனை அடித்தவனை அடித்தீர்கள் அவர் தான் இப்போ நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சொல்ல, அவர்கள் கண்ணனை எதுவும் செய்யவில்லையே என கதிர் கேட்கிறார். அதெல்லாம் இல்லை ஆனால அவர்கள் கடையை இடிக்க இருப்பதாக சொல்கிறார்கள் என ஐஸ்வர்யா சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறார்.