பிப்ரவரி 7 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழக்கமான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று துணை முதல்வர் அஜித் பவார் இன்று (பிப்.5) அறிவித்திருக்கிறார்.
பள்ளிகள் திறப்பு
கடந்த மாதத்தில் குறைந்தபட்ச தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கையை பதிவு செய்த மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டது. இருப்பினும் புனே மற்றும் மும்பை போன்ற மாநகரங்களில் உள்ள நோய் தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை சில காலம் தாமதப்படுத்தப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
TNPSC குரூப் 4 VAO தேர்வு 2022 குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
இருப்பினும், இப்போது வரை 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நான்கு மணி நேரம் அதாவது அரை நாள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகள் வழக்கமான அட்டவணைப்படி நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழக்கமான நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று துணை முதல்வர் அஜித் பவார் இன்று (பிப்.5) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
அதன் படி, இனி 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கமான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இப்போது 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி துணை முதல்வர் பேசும் போது, ‘கல்லூரி மாணவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தடுப்பூசிகள் போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது மஹாராஷ்டிராவில் குறைந்தபட்சம் 86% தகுதியுள்ள மாணவர்கள் தடுப்பூசிகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.