மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடக, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதில் அனைத்து மாநிலங்களிலும் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த ஜனவரி 26 ஆம் தேதியை முன்னிட்டு அம்மாநில அரசின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதில் அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்கள் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை என 5 நாட்கள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சம்பள உயர்வு!
மேலும் வார இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மாநில அரசின் கொள்கை முடிவுகளில் ஓய்வூதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சத்தீஸ்கர் மாநில அரசின் புதிய அறிவிப்புகளால் அரசு ஊழியர்கள் மற்றும் மாதந்தோறும் பென்ஷன் பணம் வாங்கும் அரசு ஓய்வூதியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.