TNPSC குரூப் 4 VAO தேர்வு 2022 குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
தமிழகத்தில் தற்போது அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு குறித்து TNPSCயின் தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 VAO தேர்வு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதமும் அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குருப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
இதனை தொடர்ந்து அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் இது குறித்து TNPSCயின் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, தற்போது TNPSC தேர்வாணையம் துறை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் தற்போது TNPSC இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு கால அவகாசமாக வருகிற ஜனவரி 28ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!
இதுவரை அரசு போட்டி தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 வரையும் அத்துடன் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வு நடத்தப்படுவதால் தேர்வு நேரத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் எழுத்து தேர்வு நடைபெறும். அத்துடன் குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி தேர்வு கொள்குறி வகையிலும் மற்ற தேர்வுகளில் விரிவாக விளக்கும் வகையிலும் கேட்கப்படும். அத்துடன் இந்த தமிழ் தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயமாக எடுக்க வேண்டும். கூடுதலாக எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடும் போது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.