மீண்டும் பிப்.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆன்லைன் வகுப்புகள்! மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தினசரி தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 30 வரை அளிக்கப்பட்ட விடுமுறை, பிப்ரவரி 15 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசு அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா, ஓமைக்ரான் நோய் பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் அடிப்படையில் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு அலைகளை தொடர்ந்து மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்காக, முதற் கட்ட விடுமுறையாக ஜனவரி 16 முதல் ஜனவரி 23 வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்தது.
BOB, ICICI, PNB & SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண மாற்றங்கள் அறிவிப்பு!
மேலும் தினசரி தொற்று கிடுகிடுவென உயர்வதால் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஜனவரி 30 வரை நீட்டித்தது. இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை 10,937 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. மேலும் தினசரி நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 80,342 ஆகவும் இருந்தது. இந்த வகையில் 23 இறப்புகள், இறப்பு எண்ணிக்கை 23,106 ஆகவும் உயர்ந்துள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
இதனை தொடர்ந்து லக்னோவில் அதிகபட்சமாக 3,294 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கௌதம் புத்த நகரிலிருந்து 1,323, மீரட்டில் 902, காஜியாபாத்தில் 852, வாரணாசியில் 594 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லக்னோ, கான்பூர் நகர், கவுதம் புத்தா நகர் மற்றும் மீரட் ஆகிய இடங்களில் தலா இரண்டு இறப்புகளும், காசியாபாத், வாரணாசி, மீரட், ஃபதேபூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. இதனால் உத்திர பிரதேச மாநிலத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை பிப்ரவரி 15 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அரசு குறிப்பிட்டுள்ளது.