மதுரையில் நாளை (ஜன.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை (ஜன.28) மதுரையில் உள்ள பந்தயத்திடல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக எதிர்பாராத பல விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் மழை காலங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுகிற அபாயம் ஏற்படுகிறது. அதனால் இதனை முறையாக சரி செய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மின்வாரியம் மேற்கொள்கிறது. மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள பந்தயத்திடல் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.28) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!
அதனால் பந்தயத்திடல் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த துணை மின் நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளான பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா், சொக்கிகுளம், வல்லபாய் சாலை, பந்தய சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி அலுவலக குடியிருப்பு, டிஆர்ஓ காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை, கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் சாலை, ரிசர்வ் லைன், ரேஸ்கோா்ஸ் காலனி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை!
மேலும் ஆட்சியர் முகாம் அலுவலகம் பகுதி, ஜவஹர்புரம், திருவள்ளுவா் நகா், அழகர் கோவில் சாலையில் ஐடிஐ பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை, காமராஜா் நகா், எச்.ஏ.கான் சாலை, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேல் தெரு, தல்லாகுளம் மூக்க பிள்ளை தெரு, ஆா்.எஸ்.என். பிரதான சாலை, உழவர் சந்தை பகுதிகள், கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், பூக்கடை, பழைய நத்தம் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகா், குடிசை மாற்று வாரியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று மதுரை பெருநகர் செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி அவர்கள் தெரிவித்துள்ளார்.