‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் குளறுபடி செய்யும் ஐஸ்வர்யா, ஒற்றுமை குழையுமா? பதட்டத்தில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றாலே ஒற்றுமை என்பது தான் முதலில் அனைவரது நினைவிற்கும் வரும். ஆனால் சமீப நாட்களாக குடும்பத்தின் ஒற்றுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பல சிக்கல்கள் வருகின்றது.
ஐஸ்வர்யாவின் போக்கு:
மிகவும் ஒற்றுமை நிறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குடும்பத்தினர் யாரும் மற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பொறுத்து போகும் குணம் கொண்ட குடும்பத்தில் மீனா மட்டும் தான் முதலில் சற்று வித்தியாசமாக இருந்தார். ஆனால் நாளடைவில் மீனாவும் குடும்பத்தின் மீது பாசம் வைக்க தொடங்குகிறார். இப்படியான நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கண்ணன் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.
“அபி டெய்லர்” சீரியலில் ஒன்று சேர்ந்த விஜய் டிவி வில்லிகள் – வெண்பா வெளியிட்ட வீடியோ!
இதனால் கண்ணன் மீது அனைவரும் கோவப்பட்டு பேசாமல் உள்ளனர். ஆனால் தனத்தின் அண்ணி கஸ்தூரி இப்படியே ஒதுங்கி இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒன்றாக சேர முடியாது. அதனால் மூர்த்தி வீட்டிற்கு எதிரிலேயே ஒரு வீட்டில் கண்ணன், ஐஷுவை குடி வைக்கிறார். மேலும், அந்த வீட்டில் தனம் தான் எல்லாம் என்று இருக்கும் போக்கை நீ தான் மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ஐஷுவிற்கு அட்வைஸ் செய்வார். இவர்கள் எதிரில் இருந்து கொண்டு கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் தனம் இவர்களை தங்களோடு வைத்துக் கொள்கிறார்.
‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்த பிரியங்கா – வைரலாகும் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் வந்த ஐஷு அங்கு இருக்கும் விதிகளை மாற்றி தன் போக்கில் இருக்கிறார். இதனால் கண்ணனுக்கு கூட சற்று அதிர்ச்சி இருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் சொன்னாலும் ஐஷு கேட்பதில்லை. இதனால் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வீட்டில் வருகிறது. ஆனால் அதை யாரும் பெரிது படுத்தாமல் உள்ளனர். இந்நிலையில்,கல்லூரிக்கு செல்லும் இவர்களுக்கு தனம் பணம் கொடுப்பதை பார்த்து மீனா உங்களுக்கு தான் நல்ல சான்ஸ் என்று கூற,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தனக்கும் கண்ணனுக்கும் ஐஷு மூர்த்தியிடம் வேலை கேட்கிறார். அவர் நீங்க படிங்க என்று கூறி விடுகிறார். இப்படி ஒவ்வொரு விஷயமாக ஐஷு செய்வதை பார்த்தால் குடும்பத்தில் நிச்சயம் பெரிய சண்டை காத்திருக்கிறது என்று ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்.