நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு – பலன் கொடுக்கிறதா ஊரடங்கு? வெளியான அறிக்கை!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா என்பது பற்றி மத்திய சுகாதாரதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தினசரி உயிர் சேதங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் படி மாநில அரசுகள் நிலைமையை பொறுத்து இரவு ஊரடங்கு அல்லது வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
அதன் படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு அமலில் உள்ளது. அரசின் இந்த கட்டுப்பாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதில் நாடு முழுவதும் இன்று காலை வரை 24 மணி நேரத்தில் புதிதாக 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது நேற்றைய பாதிப்பை காட்டிலும் 20,017 குறைவு ஆகும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 310 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 1,57,421 பேர் குணமடைந்து இருக்கின்றனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 17,36,628 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கின்றனர். தினசரி கொரோனா பாதிப்பு 14.43 சதவிகிதமாக உள்ளது. மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் தொற்றால் 8,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.