தமிழகத்தில் கடைகள் திறப்பில் நேர கட்டுப்பாடுகள் அமல்? அரசு திட்டம்!
தமிழகத்தில் தற்போது தொடர்ந்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவி வருகிறது. அதனால் கடைகள் திறப்பபில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடைகள் திறக்க கட்டுப்பாடு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏற்பட்ட கொரோனா 2வது அலை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் – அமைச்சர் மூர்த்தி உறுதி!
அவ்வாறு பரவி வரும் ஓமைக்ரான் தொற்றால் கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கினை அமல்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியது. மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று ஒரு சில மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஓமைக்ரானை தொடர்ந்து கொரோனா தொற்றும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு விநியோகம் 2022!
அதனால் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் கூடிய விரைவில் அதாவது நாளை அல்லது நாளை மறுநாள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.