தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு விநியோகம் 2022!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொங்கல் பரிசு விநியோகம் 2022!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொங்கல் பரிசு விநியோகம் 2022!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு விநியோகம் 2022!

திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொருட்கள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் அரசு சார்பாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களும். கடுகு, சீரகம், மிளகு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜன.5 முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – முதல்வர் ஆலோசனை கூட்டம்!

சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு பொருட்களுடன் சேர்த்து ரொக்கப்பணமும் வழங்கப்படும். ஆனால் நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகை குறித்து எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கல் பரிசுத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதே போல் தற்போது அவரது ஆட்சியில் ரொக்கப்பணம் 5,000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.’

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்! முக்கிய உத்தரவு!

இந்த நிலையில் அரசு அறிவித்த படி ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சுழற்சி முறையில், காலை 9 மணி முதல் பிற்பகல் மாலை 6 மணி வரையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!