மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் – அமைச்சர் மூர்த்தி உறுதி!
தமிழகத்தில் ஓமைக்ரான் தாக்கம் வேகமெடுத்து வருகிற நிலையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி அவசர சட்டம் இயற்றப்பட்டு மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு விநியோகம் 2022!
கடந்த ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தாக்கமும் புதிய வைரஸான ஓமைக்ரான் தொற்றின் தாக்கமும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகமாகி விடும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து இன்று மதுரை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பத்திர பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.
தமிழகத்தில் ஜன.5 முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – முதல்வர் ஆலோசனை கூட்டம்!
அப்பேட்டியில் கொரோனா 3வது அலை காரணமாக தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மதுரை மாவட்டத்தில் கொரோனா மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளது என்றும் முதலமைச்சரின் வழிகாட்டுதல் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது எனவும் கூறினார். அடுத்த வாரம் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றின் பரவல் எண்ணிக்கைகள் குறித்து அதற்கேற்றவாறு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.