Post Office இல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6.94 லட்சம் ரிட்டன்ஸ் – தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலமாக குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தொகையை பெற முடியும். இது தொடர்பாக மேலும் சில தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். இதையடுத்து வங்கியை காட்டிலும் அதிக வட்டிகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டம் மூலமாக பெற முடியும். இதனால் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் அதிகளவு முதலீடுகளை செலுத்த தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பணத்திற்கு பாதுகாப்பான சேமிப்பும், அதிக லாபமும் கிடைக்கிறது.
மாநிலங்கள் தோறும் பள்ளி, கல்லூரிகள் மூடல் – கொரோனா பரவல் எதிரொலி! முழு விவரம் இதோ!
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு ரூ.1359.49 வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த 5 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது. முதிர்வு காலம் முடியும் முன் சேமிப்பு பணத்தை எடுத்தால் முழுமையான வட்டி தொகை வழங்கப்பட மாட்டாது இத்திட்டத்தில் 6.8% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் கணக்கையும் வைத்து கொள்ளும் வசதி உள்ளது.
சென்னையில் 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 செலுத்துவதால் நடுத்தர மக்கள் கூட இத்திட்டத்தில் கணக்கை தொடங்க இயலும். இதனால் நடுத்தர மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் ரிட்டயர்மென்ட் பணம், பிஎஃப் பணம் போன்றவற்றை தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபத்தை பெற முடியும். அத்துடன் இந்த திட்டத்தில் ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடிந்த பிறகு கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு ரூ.6.94 லட்ச ரூபாய் முதலீட்டாளரிடம் வழங்கப்படுகிறது.