செம்பருத்தி ஷபானா & ஆர்யன் இணைந்து நடிக்கும் “மாப்ள சிங்கம்” சீரியல் – ப்ரோமோ வெளியீடு!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா மற்றும் அவரது கணவர் ஆர்யன் இணைந்து “மாப்ள சிங்கம்” என்ற புதிய சீரியலில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மாப்ள சிங்கம்:
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான காதல் ஜோடிகளின் ஒருவர் தான் ஷபானா, ஆர்யன். ஷபானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் அவரது கணவர் ஆரியன் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் தங்களது நடிப்புத் திறமையால் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளனர். இந்நிலையில் ஷபானா, ஆர்யன் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D இமான் – என்ன காரணம்? ரசிகர்கள் ஷாக்!
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் இந்த திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் பிரிய இருக்கிறார்கள் போன்ற சர்ச்சைகள் கிளம்பியது. பல வதந்திகள் பரவி வந்தாலும் இந்த காதல் ஜோடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு பின் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றனர்
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மகா சங்கமம் – ப்ரோமோ ரிலீஸ்!
ஷபானா, ஆர்யன் காதல் ஜோடி இணைந்து சீரியலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் இருவரும் இணைந்து மாப்ள சிங்கம் என்ற புதிய சீரியல் நடிக்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.