மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்..!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Chairperson, Member பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
TN Govt வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chairperson, Member பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 31-12-2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 எனவும் அதிகபட்சம் 65 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.