தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி (DA) உயர்வுடன் பொங்கல் போனஸ் – முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசுத்துறையில் உள்ள பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு 31% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தவிர C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
DA உயர்வு
கொரோனா பேரலை தொற்று காரணமாக மாநில மற்றும் மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி (DA) தொகையானது கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக உயர்த்தி சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி அறிவித்தது.
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் – முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி தொகை எப்போது கிடைக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர். இது தொடர்பாக அரசும் அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டு வந்தது. இப்படி நீண்ட காத்திருப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.28) அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அரசுத்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி (DA) தொகை 17% லிருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Wipro நிறுவனத்தில் ரூ. 3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த தொகை 2022 ஜன.1 முதல் வழங்கப்பட இருக்கிறது. இது தவிர அரசுத்துறைகளில் C மற்றும் D பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் கீழ் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ.1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 என பொங்கல் பரிசு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ரூ.8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.