தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு 2022! வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வரும் ஜனவரி 3ம் தேதி வழங்கப்பட உள்ள நிலையில், அரசு இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் அனைத்து பொறுப்புகளும் மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே சேரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கும் அரசு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அரசு இதற்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டுள்ளது. அதன்படி அரசின் பரிசு தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், அதனுடன் கூடுதலாக ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
மேலும் இம்முறை கூடுதலாக அத்தியாவசிய மற்றும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் துணிப்பையுடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு முன்னதாக 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் பரவல்! பொதுமக்கள் அச்சம்!
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பரவல் காலத்தில் கருத்தில் கொண்டு தினமும் 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் அரசின் திட்டம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வரிசையில் நிற்காமல் முதலில் வழங்க வேண்டும். POS முறைப்படி பொருட்களை வழங்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியரையே சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.