தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – 2022 ஜனவரி முதல் அமல்!
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில், ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து கூட்டுறவு துறை ஓர் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில், ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டக சாலைகளில் செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் போன்றோர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட ஊதியம் தான் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் டிச.28ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முழு விபரங்கள் இதோ!
இந்த கொரோனா கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பண்டக சாலைகளில் பணிபுரிவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை பரிசீலிக்க கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. அதன் காரணமாக மண்டல இணை பதிவாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஆண்டு தோறும் தொடர்ந்து லாபத்தில் இயங்கிய பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 7 சதவீதமும் அளிக்கப்படும்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வாய்மொழி உத்தரவு!
அடுத்ததாக தொடர்ந்து நஷ்டத்தில் இருந்து நடப்பாண்டில் லாபத்தில் இயங்கிய பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 5 சதவீதமும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 3 சதவீதமும் அளிக்க பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்துப்படி, மருத்துவக் காப்பீட்டு திட்டம் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்றும் வருகிற 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படும் என்றும் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.