தமிழகத்தில் டிச.28ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முழு விபரங்கள் இதோ!
தஞ்சாவூர் மாவட்டத்தில் டிசம்பர் 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 75க்கும் மேற்பட்ட முன்னி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நேரத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு அந்தந்த மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 34% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு?
கொரோனா தாக்கத்தால் அவை ரத்து செய்யப்பட்டது. தற்போது மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருவதால் அரசு அனுமதியுடன் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து டிசம்பர் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சரிவில் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? வாய்மொழி உத்தரவு!
இந்த முகாமில் 75க்கும் அதிகமான முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளனர். மேலும் இந்த முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகான ஆட்கள் தேர்வும் நடைபெறவுள்ளது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாட்டவர்கள் தங்கள் சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். இல்லையெனில் நேரடியாக வந்து பங்கேற்று வேலை வாய்ப்பை பெறலாம். வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.