தனம், மூர்த்தி நகை போடவில்லை என அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன், பரிசு வாங்க செல்லும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயல் பிறந்தநாள் காரணமாக மீனா அப்பா அம்மா நகைகள் வாங்கி வருகிறார். பின் ஜீவாவை பிறந்தநாள் பெரிதாக கொண்டாடவில்லை என அவமானப்படுத்துவது போல பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கயல் பிறந்தநாள் காரணமாக மீனாவின் அப்பா அம்மா வருகிறார்கள். அவர்கள் கயலை கொஞ்சிவிட்டு அவளுக்கு தங்க செயின் மற்றும் வளையல் போடுகின்றனர். கோவிலுக்கு போகலையா என கேட்க காலையிலேயே கதிரும் மூர்த்தி மாமாவும் போனதாக சொல்கிறார்கள். பின் கோவிலில் அன்னதானம் கொடுத்திருக்கு நீங்க வந்த கொடுத்துட்டு வந்துரலாம் என கூப்பிடுகிறார்கள். மீனாவும் ஜீவாவும் கிளம்ப, தனம் நான் வரவில்லை என சொல்கிறார்.
முல்லை நீ வரியா என கேட்க, நான் வரக்கூடாது என சொல்கிறார். அதை பார்த்து மீனாவின் அம்மா கல்யாணம் முடிந்து 4 வருஷம் ஆகுது எப்போ குழந்தை பெற்றுக் கொள்ள போகிறாய் என கேட்கிறார். முல்லை அதை நினைத்து வருத்தப்பட அதெல்லாம் பொறுமையாக பெற்றுக் கொள்ளட்டும் என தனம் சொல்கிறார். பின் முல்லையிடம் தனம் எல்லாரும் அப்படி தான் இருப்பாங்க நீ வருத்தப்படாதே என சொல்கிறார்.
பின் மீனா குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல, அங்கே கயல் பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மீனா அப்பா ஜீவாவிடம் கேக் எல்லாம் வெட்டவில்லையா என கேட்க சாயங்காலம் வெட்ட வேண்டும் என சொல்கிறார். நீங்க அதுவும் பண்ணமாட்டீங்க என்று நினைத்தேன் என ஜனார்த்தனன் சொல்ல, அம்மா இருந்ததால் தான் பெரிதாக பண்ணவில்லை இல்லை என்றால் எல்லாம் பண்ணிருப்போம் என ஜீவா சொல்கிறார். அன்னதானம் போடும் இடத்தை ஜீவா பார்க்க செல்ல மீனாவிடம் உங்க வீட்டில் கயலுக்கு என்ன போட்டார்கள் என்று கேட்கிறார்.
தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!
அப்போது பாயசம் செய்தார்கள் என சொல்ல நகை எதுவும் போடவில்லையா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என சொல்ல, கண்ணன் ஐஸ்வர்யா உங்க வீட்டிற்கு வந்துட்டாங்களா என கேட்கிறார். ஆமாம் என சொல்ல அந்த சின்ன வீட்டில் எப்படி 8 பேர் இருக்கீங்க என கேட்கிறார். கண்ணனும் முல்லையும் பேசிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா வந்து என்ன பேசுறீங்க என கேட்கிறார். கயல் பிறந்தநாளை எப்படி அலங்காரம் பண்ணலாம் என பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறார். ஆமாம் கேக் எல்லாம் ஆர்டர் போட்டாச்சா என கேட்க, அவங்களுக்கு வாங்கிட்டு வர தெரியாதே என கண்ணன் கிண்டல் செய்கிறார்.
உங்க அண்ணா இப்போ எல்லாம் அப்படி இல்லை என பாரு எப்படி கேக் வாங்கி கொண்டு வருகிறார் என முல்லை சொல்கிறார். பின் ஐஸ்வர்யா கண்ணனிடம் கயல் பிறந்தநாளுக்கு எதாவது வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறார். நம்மளிடம் பணம் இல்லையே என சொல்ல அடுத்த மாதம் வாடகை கொடுக்க பணம் எடுத்து வைத்திருக்கேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். அந்த பணத்தை வைத்து என்ன வாங்க முடியும் என கேட்க எதாவது பொம்மை வாங்கி கொடுக்கலாம் என சொல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் முல்லையிடம் சொல்லிவிட்டு கிளம்ப முல்லை வண்டியை எடுத்துக் கொண்டு போக சொல்கிறார். ஐஸ்வர்யா வண்டியில் முதல் தடவை போறேன் என சந்தோசமாக சொல்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்