அஞ்சலியை கடத்தியவனை நெருங்கி வந்த அகில், கண்ணம்மாவை இருட்டில் பார்த்து ரசிக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அஞ்சலியை கடத்தியவனை நெருங்கி வந்த அகில், கண்ணம்மாவை இருட்டில் பார்த்து ரசிக்கும் பாரதி - இன்றைய
அஞ்சலியை கடத்தியவனை நெருங்கி வந்த அகில், கண்ணம்மாவை இருட்டில் பார்த்து ரசிக்கும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அஞ்சலியை கடத்தியவனை நெருங்கி வந்த அகில், கண்ணம்மாவை இருட்டில் பார்த்து ரசிக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதிக்கும் லட்சுமி கண்ணம்மாவிற்கும் போன் செய்து பேசுகின்றனர். பின் அகில் அஞ்சலியை கடத்தியவனை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மாவு ஆட்டி கொண்டிருக்க, பாரதி வருகிறார். அப்போது கண்ணம்மா காபி வேண்டுமா என கேட்க, ஏன் காபி கொடுத்து என்னை மயக்க போகிறாயா என கேட்கிறார். பின் கண்ணம்மாவிற்கு போன் வருகிறது. அதை பாரதி எடுக்க, என் அம்மா தான் போன் செய்கிறார். என்னிடம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என என் அம்மா சொல்லிக் கொடுக்க தான போன் செய்கிறார்கள் என சொல்கிறார். அப்போது எங்கே போனை எடுத்து ஸ்பீக்கரில் போடுங்க என சொல்கிறார்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – ஒரு டிக்கெட் ரூ.1.5 கோடி! தேவஸ்தானம் ஏற்பாடு!

பாரதி போனை எடுக்க லட்சுமி பேசுகிறார். அவர் அம்மா எப்படி இருக்க தனியாக இருக்க உனக்கு ஒரு மாதிரி இருக்கலையா என கேட்கிறார். நான் எங்கே தனியாக இருக்கேன் என கண்ணம்மா சொல்ல பாரதி முடியாது என சொல்ல சொல்கிறார். பின் கண்ணம்மா கீழ் வீட்டில் ஒரு ஆன்டி வந்துருக்காங்க என சொல்லி சமாளிக்கிறார். அடுத்து ஹேமா பாரதிக்கு போன் செய்கிறார். ஹேமா பேசிக் கொண்டிருக்க, கண்ணம்மாவிற்கு இருமல் வருகிறது. ஹேமா என்ன சமையல் அம்மா குரல் போல இருப்பதாக சொல்ல, அது என்னிடம் மருத்துவம் பார்க்க வந்த நோயாளி, நான் உன் சமையல் அம்மாவை பார்க்கவே இல்லை என சொல்கிறார்.

ஹேமா பொய் சொல்லாதீங்க என சொல்லி நீங்க சமையல் அம்மாவிற்கு நேற்று ட்ரீட்மென்ட் பார்த்தீங்க சமையல் அம்மா அந்த போட்டோவை பாட்டிக்கு அனுப்பி இருந்தாங்க என சொல்கிறார். பின் பாரதி இந்த வேலை எல்லாம் இனிமேல் பார்க்காதே என சொல்கிறார். மறுபக்கம் அஞ்சலி குழந்தையுடன் இருக்க அவருடைய தோழி ஒருவர் போன் செய்கிறார். அவர் குழந்தைக்கு தாய் பால் கொடுத்தால் அழகு போய்விடும் அதனால் பசும்பால் கொடு என சொல்கிறார். அஞ்சலியும் சரி கொடுத்து பாப்போம் என நினைக்கிறார்.

தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை – முக்கிய அறிவிப்பு!

மறுபக்கம் அகில் அஞ்சலியை கடத்தியவனை தேடி அலைய சிசிடிவி காட்சிகள் கிடைக்கிறது. மறுபக்கம் கண்ணம்மா வீட்டில் பாரதி படித்துக் கொண்டிருக்க, கண்ணம்மா என்ன பண்றீங்க என கேட்கிறார். நாளைக்கு மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்க வேண்டும் என சொல்ல, அதை பார்த்த வடிவுக்கரசி கரண்ட் கட் செய்கிறார். அப்போது கண்ணம்மா சார்ஜர் லைட் கொண்டு வந்து கொடுக்கிறார். அந்த வெளிச்சத்தில் பாரதி கண்ணம்மாவை பார்க்க கண்ணம்மா பாரதியை பார்க்கிறார்.

பின் கண்ணம்மா கொசு அடித்துவிடுகிறார். பாரதி ஏன் இங்கே உட்கார்ந்து இருக்காய் என கேட்க, நீங்க மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என சொன்னீங்க அதனால் தான் என கண்ணம்மா சொல்கிறார். பாரதிக்கு காபி போட்டு கொடுத்து இந்த நேரத்தில் கொடுத்ததால் இந்த காபி 200 ரூபாய் என சொல்கிறார். கண்ணம்மா அப்படியே தூங்க பாரதி கண்ணம்மாவை பார்த்து ரசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!