“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கண்ணனை அடித்த ரௌடிகளை அடித்த நிலையில், அடுத்து வரும் ட்விஸ்ட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்தது போல கண்ணனை வீட்டிற்குள் தனம் அழைத்து வந்துவிட்டார். ஆனால் கண்ணனிற்கு ரூம் இல்லாததால் யாருடைய ரூமை கொடுப்பார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வாரம் முழுவதும் கயலின் பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். அதில் மீனாவின் அப்பா நகை போட தனம் கயலுக்கு செய்ததை நினைத்து மீனா மிகவும் சந்தோசப்படுகிறார்.
சென்னையில் நாளை (டிச.20 & 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பின் கதிர் கண்ணனை அடித்த ரௌடிகளை அடிக்க, அவரை பழிவாங்க கதிரை ரௌடிகள் அடிக்கின்றனர். அதனால் கோவப்பட்ட அண்ணன்கள் சேர்ந்து அந்த ரௌடிகளை அடித்து போலீசில் ஒப்படைகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில் எல்லா பிரச்சனைகளையும் கடந்து முல்லையும் கதிரும் சந்தோசமாக வாழ்கின்றனர். பின் முல்லை கர்ப்பமாக இருக்க, அவருக்கு வளைகாப்பு என மீதமுள்ள எபிசோட் வர இருக்கிறது.
Vijay TV Bigg Boss 5 Promo 2 | பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக அறிவித்த நடிகர் ஆதி!
அடுத்து இருவருக்கும் பெண் குழந்தை பிறக்க இருக்கிறது. அதனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்க அடுத்து என்னவெல்லாம் சர்ச்சைகள் ஐஸ்வர்யாவால் வருகிறது எனவும், பிறந்தநாள் விழாவில் கண்ணனை பார்த்த குடும்பத்தினர் எப்படி நினைக்கிறார்கள் என்பதே கதையாக இருக்கும். மேலும் முல்லை கதிர் காதல் காட்சிகள் அதிகமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.