தமிழகத்தில் நாளை (டிச.20) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அம்மாட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் சுயம்புவால் ஆன பச்சை மரகதலிங்கத்தால் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு இந்த விழாக்கள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு – வைரலாகும் ப்ரோமோ!
இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் குறைந்துள்ளதால் விழாக்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்கழி மாதம் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆருத்ரா தரிசன விழா நாளை திங்கட்கிழமை டிச.20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் டிச.20ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. அதனால் திங்கள்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில் குறைந்த அளவிலான அலுவலர்களை கொண்டு இயங்க அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜன.8ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்