தமிழகத்தின் இம்மாவட்டத்தில் டிச.20 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக அம்மாவட்ட நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து விதமான கோவில்கள் திறக்கவும், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து விதமான கோவில்கள் திறக்கப்பட்டன. மேலும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
டிச.19 முதல் ஜன.30 வரை ஊரடங்கு அமல் – அரசு நடவடிக்கை! கொரோனா பரவல் எதிரொலி!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் ஆருத்ரா தரிசனம் எனப்படும் திருவாதிரை திருவிழா சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த ஆண்டு இவ்விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பொது மக்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 7% ஊதிய உயர்வு! கூட்டுறவுத்துறை உத்தரவு!
ஆருத்ரா தரிசனம் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக வருகிற 20 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் அவர்கள் தெரிவித்துள்ளார்.