6 முதல் 12ம் வகுப்புகளுக்கு டிச.18 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
கடந்த மாதம் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு விட்டது. தற்போது காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் மாணவ, மாணவியர்கள் தங்களது பாடங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக கற்று வந்தன. அதன் பின் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் நோய் பரவல் கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து நவம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.2,18,200/-
கடந்த மாதம் தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் 1 வாரம் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மேம்பட்டு வந்தது. அதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க டெல்லி அரசு மீண்டும் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் வேலைகளுக்கு செல்வோர் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சிக்கு உள்ள வியாதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆனால் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கின் முடிவில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதனால் மீண்டும் பள்ளிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. தற்போது தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு உள்ளதால் 6 முதல்12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று டெல்லி அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.