விஜய் டிவி ‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சிக்கு உள்ள வியாதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியுள்ள இமான் அண்ணாச்சி தனக்கு ஒரு புதிய வித்தியாசமான வியாதி இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது வியாதியை பற்றி அறிந்துள்ள ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இமான் அண்ணாச்சி:
சில வருடங்களுக்கு முன்னர் வரை பிரபலமடையாத பலரும், தொலைக்காட்சிகளில் பணியாற்ற தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பரிட்சயமான நபராக மாறி விடுகின்றனர். இதனால் பிரபலம் ஆகும் எண்ணம் கொண்ட பலரும் சின்னத்திரையை தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் ஆதித்யா சேனலில் மக்களிடம் நேரடியாக கலந்துரையாடும் நீங்க சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலத்தை அடைந்தவர் இமான் அண்ணாச்சி. இவர் அதன் பிறகு, சன் டிவியில் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.
விஜய் டிவியில் களமிறங்கும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் – ப்ரோமோ வெளியீடு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராகி விட்டார் அண்ணாச்சி. ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கடைசி வரை வருவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் அண்ணாச்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அண்ணாச்சி தற்போது வெளியில் வந்து பேட்டி அளித்துள்ளார்.
சன் டிவி ‘வானத்தைப் போல’ சீரியல் ஹீரோயின் விலகல், புதிய நாயகி அறிமுகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதில், தனக்கு ஒரு வித்தியாசமான வியாதி இருப்பதாக கூறியுள்ளார். அதாவது பின்னால் நடக்க கூடிய விஷயங்களை முன் கூட்டியே சொல்லக்கூடிய வியாதி தானம் அது. இதனால் தான் ஒவ்வொரு வாரமும் யார் வெளியில் செல்வார்கள் என்பதை அண்ணாச்சி சரியாக சொல்வாராம். இதே முறையில் தான் தான் அந்த வாரம் வெளியேற போவதாகவும், கூறியுள்ளார். தன்னுடைய வித்தியாசமான திறமையால் வாழ்க்கையில் பின் நாட்களில் நடப்பது எல்லாம் இவருக்கு முன்பே தெரிந்து விடுகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாது. ஆனால் தான் அதை நினைத்து சந்தோசப்படுவதாகவும், பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.