தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசிடம் அனுமதி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவ உள்ளதை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கோர உள்ளோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் மற்றொரு தாக்குதலாக கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் தடுப்பு பணியாக தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் வர இ-பதிவு கட்டாயம், தீவிர கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் தடுப்பு பணியாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் அவர்கள் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு – 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
இந்த நிலையில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 70 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு நோய் பரவல் நிலையை கருதி கொண்டு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.