மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசுக்கு பரிந்துரை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
கர்நாடகா மாநிலத்தில் வாராந்திர சோதனை நேர்மறை விகிதம் 5% த்தை தாண்டினால் மட்டுமே, மாவட்டங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதை கருத்தில் கொள்ளுமாறு அரசுக்கு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAC) அறிவுறுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் கர்நாடகா மாநில அரசுக்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒரு முக்கிய வலியுறுத்தலை முன் வைத்துள்ளது. அதாவது கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொரோனா இரண்டாவது மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, வாராந்திர சோதனை நேர்மறை விகிதம் (WTPR) 5%க்கு மேல் சென்றால் மட்டுமே மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிப்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ஆயத்த பணிகள் தொடக்கம்!
இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகளின் படி, கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை ஆபத்தானது அல்ல என்றும் முழு ஊரடங்கு விதிப்பது அவசியமில்லை என்றும் TAC அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட TAC அறிக்கையில், ‘கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளது. TPR விகிதம் 10% க்கு அதிகமாகவும், ஆக்ஸிஜன் படுக்கைகள் 60% ஆகவும் இருக்கும் போது கடைசி முயற்சியாக முழு ஊரடங்கை விதிக்க இந்திய அரசாங்கம் பரிந்துரைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post Office இல் Joint அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
தேவைப்பட்டால் தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில தடைகளை அரசாங்கம் விதிக்கலாம் என்று TAC பரிந்துரைத்தது. இதற்கிடையில், மக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல் நடத்தையை பின்பற்றாததால், புதிய ஆலோசனைகள் மற்றும் விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை இந்தியாவில் ஒமிக்ரான் மாறுபாடு தொற்று 61 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.