முகத்தில் காயத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காயங்களுடன் கூடிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் சரவண விக்ரம்
தற்போது அடிதடியான சண்டை காட்சிகளுடன் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கக்கூடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீண்டுமாக மக்களின் கவனம் பெற துவங்கியுள்ளது. பொதுவாக பெரியதொரு சண்டை, சச்சரவுகள் எதுவும் இல்லாத, குடும்பப் பாங்கான கதைக்களம் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கொண்டாட்டம் நிறைந்ததாகவே காணப்படும். ஆனால் கண்ணன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பிற்பாடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த நடிகர் அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
அந்த வகையில் ஜனார்த்தனன் கடையில் வேலை செய்து வரும் கண்ணன் திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட, உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கும் மீனா கண்ணனை காப்பாற்றுகிறார். பிறகு கடையில் பணத்தை திருடிய பையனிடம் கதிர் மற்றும் ஜீவா இருவரும் மோத இந்த பிரச்சனையும் கண்ணன் மீது திரும்புகிறது. அதாவது, கதிர் மற்றும் ஜீவாவை பழிவாங்க வரும் கடை பையன் கண்ணனை ஆள் வைத்து அடித்து விடுகிறார்.
புதிய சீரியலில் களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா நக்ஷத்ரா – அடாவடி பெண்ணாக அவதாரம்!
இப்போது ரவுடிகளால் தாக்கப்படும் கண்ணன் குற்றுயிரும், குலையுயிருமாக கிடைக்க அவரை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள் கதிரும், ஜீவாவும். இதனால் மீண்டுமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கண்ணன் அடியெடுத்து வைக்க கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருப்பதாக ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனாக நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம், முகத்தில் காயத்துடன் எடுத்துக்கொண்ட சண்டை காட்சியின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.