“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த நடிகர் அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண் அவர் தற்போது படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்.
நடிகர் அருண்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக “பாரதி கண்ணம்மா” சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வருகிறார். அவருடைய எதார்த்தமான நடிப்பால் அவருடைய சொந்த பெயரை மறந்து பாரதியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். கண்ணம்மாவை வெறுப்பதும் அவர் மீதும் பாசத்தை கொட்டுவதும் என அவர் நடிப்பு திறமையை பாராட்ட வார்த்தையே இல்லை.
புதிய சீரியலில் களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா நக்ஷத்ரா – அடாவடி பெண்ணாக அவதாரம்!
கண்ணம்மா கதாபாத்திரத்தில் முன்னதாக ரோஷினி நடித்து வந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் ரோஷினி விலகிய பின் TRPயில் வீழ்ச்சி ஏற்பட்டது அதனால் சீரியலில் பல திருப்பங்களை கொண்டு வந்து தற்போது 2 வாரங்களாக சீரியலில் முதல் இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு – ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!
பரபரப்பான கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் சீரியல் படப்பிடிப்புகளில் இருந்து அருண் சற்று விலகி பல இடங்களில் சுற்றி பார்த்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவருக்கு பிடித்தமான விளையாட்டு ஒன்றை விளையாட இருப்பதாகவும், படப்பிடிப்பில் இருந்து விலகி இருப்பதாகவும் கேப்சன் பதிவிட்டு இருக்கிறார். மேலும் சீரியலில் இருந்து ரோஷினி அகில் என முக்கிய கதாபாத்திரங்கள் சினிமா வாய்ப்பு கிடைத்து விலகிய நிலையில் அருண் சினிமா வாய்ப்பு தேடி வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.