1 முதல் 7ம் வகுப்புகளுக்கு டிச.14 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, மும்பை ஆகிய மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை டிசம்பர் 15 முதல் மீண்டும் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
வரும் வாரத்தில் மஹாராஷ்டிரா மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டுமாக துவங்க இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி மாதந்தோறும் முகாம்கள்!
இதற்கிடையில் நாசிக் முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 13ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் சுமார் 60 சதவீத பெற்றோர்கள் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையுள்ள 1,85,279 மாணவர்களுக்காக சுமார் 504 பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது;
இப்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன் சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, பள்ளிக்குச் செல்லும் 48 மணி நேரத்திற்கு முன், அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் எதிர்மறையான RTPCR அறிக்கையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னரே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அது போல அறிகுறி உள்ள குழந்தைகளும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு முன் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பொருத்தமான நடத்தைகளை எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும். ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த பெஞ்சுகள் ஆறு அடி இடைவெளியில் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் IAS, IPS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – டிச.28 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் மும்பை, புனே உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் டிசம்பர் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இப்பகுதியில் ஒமிக்ரான் மாறுபாடு பாதிப்பை கருத்தில் கொண்டு, 1 முதல் 7ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் டிசம்பர் 1க்கு பதிலாக டிசம்பர் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இப்பகுதிகளில் உள்ள 2,20,000 மாணவர்கள் டிச.15 முதல் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளனர்.