தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி மாதந்தோறும் முகாம்கள்!

0
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி மாதந்தோறும் முகாம்கள்!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இனி மாதந்தோறும் முகாம்கள்!
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி மாதந்தோறும் முகாம்கள்!

 

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தற்போது மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இது தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்தனர். அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வாய்ப்புகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது. தற்போது இந்த வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை இம்மாதம் முதல் அமல்படுத்தப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் IAS, IPS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – டிச.28 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அத்துடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று கொள்ளலாம். அதனை தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்வதன் மூலம் பலரும் வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளலாம்.

ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அதில் குறிப்பாக அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்காக பதிவு செய்து கொள்ளவும் முடியும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலையளிப்பதற்கு கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் விண்ணப்பித்து இருக்க வேண்டும். இவ்வாறு ஏராளமான வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் இந்த மாபெரும் முகாம்களில் கலந்து கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் பயன்பெறுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!