தமிழக அரசு சார்பில் IAS, IPS தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – டிச.28 கடைசி நாள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பதவிகளுக்கான சீவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு:
இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வான ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய பணியிட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுத விருவுவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் அரசு சார்பாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்கு குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
இந்த பயிற்சி மையத்தில் தகுதியுடைய பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தபடுகிறது. சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் 225 முழு நேர தேர்வர்கள், 100 பகுதி நேர தேர்வர்களும், பிற பயிற்சி மையங்களில் 100 முழு நேர தேர்வர்களுக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது இந்த பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் அடுத்த ஆண்டு ஜூன் 22 இல் நடத்த உள்ள குடிமைப் பணி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!
இந்த மையத்தில் சேர்த்து பயன்பெற விரும்புவோர் இன்று முதல் www.civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 2022 ஜனவரி 23ம் தேதி நடைபெறவிருக்கும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வில் தேர்வு பெறுபவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கும் என்று தலைமைச் செயலாளரும், குடிமைப் பணித்தேர்வு பயிற்சித் துறை தலைவருமான இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.