ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

0
ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
ரேஷன் கார்டுடன், ஆதாரை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

இந்தியாவில் 2014 – 2021 வரையிலான ஆண்டு காலத்தில் சுமார் 4.28 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது விநியோகத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்னை இணைக்க கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை:

இந்தியாவில் மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

மேழும் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளில் பொருட்களையே பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் 2014 – 2017 ஆண்டு வரையில் சுமார் 4.28 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!

பொது விநியோக திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு ரேஷன் அட்டைகளின் தரவுகள், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, இறப்புகள் ஒரே பெயரில் இரண்டு அட்டைகள் என மொத்தம் இதுவரை 4.28 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததற்காக எந்த குடும்ப அட்டையும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதி வரை இணைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!