குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு – தலைவர்கள் இரங்கல்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படை தளபதி:
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னுரில் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த உயரதிகாரி கூட்டத்தில் பங்கேற்க இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தமிழகம் வந்தனர். இவர்கள் இன்று காலை 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி சென்று கொண்டிருந்த போது பிற்பகல் 12:40 மணி அளவில் கடும் மேகமூட்டமாக காணப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்தது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கோரிக்கை!
இதில் முப்படை தலைமை தளபதி மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் தீயில் கருகியதால் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்த விமானப்படை கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்று விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!
விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதியாக பொறுப்பேற்றவர். அதன் பிறகு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். முப்படை தலைமை தளபதியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.