TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கோரிக்கை!

0
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - முக்கிய கோரிக்கை!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு - முக்கிய கோரிக்கை!
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிட தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடை செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் முதலில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்குமா? முதலீடு விபரம்!

தற்போது அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் தேர்வு இன்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த விரிவுரையாளர் தேர்வு கடந்த 2017ம் ஆனது நடைபெற்றது. இதில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர் பெருமளவில் தேர்வானார்கள். இதனால் வெளி மாநிலத்தவரை நீக்கி விட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தேர்வை ரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ் வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே வெளிமாநிலத்தவர் தேர்வில் பங்கேற்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!