நாடு முழுவதும் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் – வங்கி ஊழியர்கள் சங்கம்!
நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்:
நாட்டின் வாரக்கடன் நிலுவைகளை ஈடு செய்வதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று 2021 -2022 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு நாட்டின் பல தரப்புகளில் இருந்தும் வங்கி பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நடப்பு நிதியாண்டில் 2 பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக வங்கி ஊழியர்களின் பயத்தை நீக்குவதற்காக தனியார் மயமாக்கப்பட கூடிய வங்கிகளின் தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் அனைத்தும் எப்போதும் போல் வழங்கப்படும் என்றும், அதில் மாற்றங்கள் செய்யப்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
தமிழகத்தில் வரும் டிச.25 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? டிச.17ம் தேதி திருப்புதல் தேர்வு துவக்கம்!
இருப்பினும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். இதனால் மத்திய அரசின் வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, வங்கி சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் நேரடியாக இன்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் இரண்டு தரப்பினருக்கும் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – பொருட்கள் கொள்முதலில் முறைகேடு?
இதனால் திட்டமிட்டபடி வரும் 16,17 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாகும் முடிவை மத்திய அரசு கைவிடாத பட்சத்தில் இது போல் பல வகைகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாடு முழுவதும் அன்றைய தினம் வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களின் வங்கி பணிகளை மேற்கொள்ளவதில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.